Friday, 8 November 2019

தங்கம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்


தங்கம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் :



தங்கம் நம்  வாழ்வில் ஓர் அங்கம் ஆகிவிட்டது, எனவே அதை வாங்கும் முன் தங்கத்தை பற்றி முழு தகவல்களையும் அறிந்துகொண்டு வாங்குவது சிறந்தது.


முதலில் தங்கத்தின் தனித்தன்மையை பற்றி பார்ப்போம்:


  • தங்கம் மற்ற உலோகம் போல அல்லாமல் அதிக தனித்தன்மை பெற்றிருக்கிறது. தங்கத்தை நீர், காற்று, நெருப்பு, இரசாயன திரவம் (இராசதிராவகத்தை தவிற), என எதனாலும் அதன் தனித்தன்மை பாதிக்காத உலோகம் ஆகும். 
  • தங்கம் இராசதிராவகம் எனப்படும் நைட்ரிக் அமிலம் 1 பங்கும்,ஹைட்ரொகுளோரிக் அமிலம் 2 பங்கும் சேர்ந்த கலவையில் மட்டுமே கரையும்.
  • தங்கம் பல வருடம் தண்ணீரில் அல்லது நிலத்தடியில் இருந்தாலும் அதனுடைய தன்மையை இழக்காமல் இருக்கும்.
  • தங்கம் மற்ற உலோகத்தை விட அதிகம்  மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்டது.
  • தங்கத்திற்கு வெப்பத்தையும், ஒளியையும்  பிரதிபலிக்கும் தன்மை கொண்டது.
  • தங்கம் நம் உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது சிறிதளவு தங்கத்தை(சுத்த தங்கத்தை) நாம் விழுங்கினாலும் அது நம் உடலை பாதிக்காது அப்படியே வெளியேறிவிடும்.

தங்க நகை கடைக்கு சென்று சுத்த தங்கத்தில்(pure gold) நகை கேட்காதீர்கள் !
சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது, ஏனெனில் தங்கம் மென்மையான உலோகம், அதில் வெள்ளி அல்லது செம்பு போன்ற உலோகம் கலந்தால்தான் அதற்கு உறுதி தன்மையும் கெட்டி தன்மையும் கிடைக்கும். எனவேதான் சுத்தமான தங்கத்தில் நகை செய்ய முடியாது


காரட் என்ற அலகால் தங்கத்தின் மதிப்பை  கணக்கிடுகின்றனர்.

1
காரட் மதிப்பை கண்டறிவதற்கான கணக்கு:
99.99/24kt = 4.166கிராம்
  
1காரட் என்பது 4.166கிராம் சுத்த தங்கம் ஆகும்

24 காரட் என்பது 99.9% சுத்த தங்கம் ஆகும் இதில் 1% வேறு உலோகம் இருக்கும் 24காரட்ல்  நகை செய்தாலும் அவை எளிதில் சேதமடையக்கூடியவை ஆகும். (24*4.166 = 99.9).

22 காரட் என்பது 91.6% சுத்த தங்கம் ஆகும் இதில் 8.4% செம்பு வெள்ளி போன்ற வேறு  உலோகமும்  இருக்கும் எனவேதான் 22காரட் நகை ஓரளவுக்கு  உறுதி தன்மை கெட்டித்தன்மையுடனும்  இருக்கும். (22*4.166 = 91.6). ( வேறு உலோகம் கலக்க காரணம் நகையின் கெட்டித்தன்மைக்கும் உறுதித்தன்மைக்கும்).


18 காரட் என்பது 75% சுத்த தங்கம் ஆகும் இதில் 25% செம்பு வெள்ளி போன்ற வேறு  உலோகமும்  இருக்கும் 18kt கெட்டி தன்மையும்  உறுதி தன்மையும் நன்றாகவே  இருக்கும். (18*4.166 = 75).


14 காரட் என்பது 58.5% சுத்த தங்கமும் 41.5% செம்பு வெள்ளி போன்ற வேறு  உலோகமும்  இருக்கும் (14*4.166 = 58.5).


9 காரட்  என்பது 37.5% சுத்த தங்கமும் 62.5% செம்பு வெள்ளி போன்ற வேறு  உலோகமும்  இருக்கும் (9*4.166 = 37.5)

  • காரட் மதிப்பு குறைய குறைய தங்கத்தின் உறுதித்தன்மையும் கெட்டித்தன்மையும் அதிகமாக இருக்கும்.
  • காரட் மதிப்பு அதிகமாக அதிகமாக சுத்த தங்கத்தின் அளவு அதிகமாக இருக்கும், உறுதித்தன்மையும் கெட்டித்தன்மையும் குறைவாக  இருக்கும்.
  • அன்றாட உபயோகத்திற்கு நகை வாங்குகின்றோம் என்றால் 18kt நகை வாங்கலாம், எப்பொழுதாவது பயன்படுத்த என்றால் 22kt நகை வாங்கலாம்.
  • கே டி எம் என்பது காட்மியம் என்ற உலோகம் ஆகும். இந்த காட்மியம் உலோகம் மனிதர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியது. எனவே தற்போது கே டி எம் தங்க நகையை வாங்கி அணியும் மக்களுக்கு சரும வியாதியும் ஒவ்வாமையும் ஏற்படுவதால், இந்திய தர நிர்ணய கழகம் கேடிஎம் நகைகளை தடை செய்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இந்திய தர நிர்ணய கழகத்தால் சான்றளிக்கப்பட்ட  ஹால் மார்க் முத்திரை இடப்பட்ட நகைகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது.
  • தங்க நகை முதலீடு அல்ல, நாம் வாங்கும்போதே 30% அதிகமாக கொடுத்துதான் வாங்குகின்றோம்.  எனவே தங்க நகை வாங்கும்போது பேரம்பேசி செய்கூலி, சேதாரத்தை குறைத்து வாங்கவும்
  • தங்கத்தை முதலீடாக சேர்க்கிறீர்கள் என்றால் தங்க காயினாக வாங்காமல்  தங்க கட்டியிலிருந்து வெட்டி வாங்கி கொள்ளலாம், தங்க காயினாக வாங்கினால் 8 கிராம் வாங்க ரூ300 லிருந்து ரூ400 வரை அதிகம் கொடுத்து வாங்கவேண்டி வரும். அதுவே தங்க கட்டியாக வாங்கினால் அதிகமாக எந்த தொகையும் செலுத்த தேவையில்லை 24 கேரட் கட்டியாக  1 கிராமிலிருந்து எத்தனை கிராம் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். 
  • தங்க நகைகள் வாங்கும் பொழுது முக்கியமாக பார்க்க வேண்டியது கற்கள் இல்லாமல் அல்லது குறைவான கற்கள் உள்ள நகைகள் வாங்குவது நல்லது மற்றும் தங்க நகைகளில் பொடியின் அளவு குறைவாக இருக்கும் நகைகளாக வாங்குவது சிறந்தது, ஏனெனில் பிற்காலத்தில் அந்த நகையை விற்கிறோம் என்றால் நல்ல விலை கிடைக்கும்.
  • பழைய நகைகளை விற்கிறீர்கள் என்றால் உருக்கி, தர பரிசோதனைக்கு கொடுத்து அதன் தரத்தை அறிந்து விற்றால் ஏமாறுவதற்கு வாய்ப்பில்லை.
  • நகை கடைகளில் பழைய நகையை கொடுத்து புதிய நகையை வாங்குகிறீர்கள் என்றால் உங்கள் பழைய நகையில் உள்ள அழுக்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு மில்லிகிராமும் நகையில் கல் ஏதாவது பதிந்திருந்தால் கற்களின் எடையும், பொடி  அதிகம் வைத்த நகையாக இருந்தால் அதற்க்கும் ஒரு குறிப்பிட்ட அளவு எடையை சேதாரமாக குறைப்பர் அதே நகையை நாம் உருக்கி விற்றால் நமக்கு 10% லிருந்து 15% வரை அதிகமாக கிடைக்கும். 

தங்கத்தின் சுத்த தன்மையை உரைகல், உப்பு, மற்றும் நைட்ரிக் அமிலம் கொண்டு நாம் வீட்டிலேயே பரிசோதனை செய்து தெரிந்துகொள்ளலாம்.

99.99% சுத்த தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 99.99% சுத்த தங்கமும் 0.01% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைகல்லில் உரசும் போது மெருதுவாக இருக்கும்.
  • உரைகல்லில் உரைந்த இடத்தில்  மஞ்சள் நிறமாக இருக்கும்.
  • உரைந்த இடத்தில் துகள்கள் சிதறும், சிதறிய துகள்கள் பெரியதாக இருக்கும்.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் எவ்வித மாற்றமும் நிகழாது இருக்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தாலும் எவ்வித மாற்றமும் நிகழாது.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 99.99% சுத்த தங்கமாகும்.

91.6%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 91.6% சுத்த தங்கமும் 8.4% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது மெருதுவாக இருக்கும்.
  • உரைக்கல்லில் உறைந்த இடத்தில்  Dim Brown, மற்றும்  yellow shade ஆக இருக்கும்.
  • உரைந்த இடத்தை சுற்றி துகள்கள் சிதறும், சிதறிய துகள்கள் சிறியதாக இருக்கும்.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் எவ்வித மாற்றமும் நிகழாது இருக்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தாலும் எவ்வித மாற்றமும் நிகழாது.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 91.6% சுத்த தங்கமாகும்.
88%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 88% சுத்த தங்கமும் 12% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது மெருதுவாக இருக்கும்.
  • உரைக்கல்லில் உரைந்த இடத்தில்  Dim Brown, ஆக இருக்கும்.
  • உரைந்த இடத்தை சுற்றி துகள்கள் சிதறும், சிதறிய துகள்கள் நைசாக இருக்கும்.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் எவ்வித மாற்றமும் நிகழாது இருக்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தாலும் எவ்வித மாற்றமும் நிகழாது.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 88% சுத்த தங்கமாகும்.
85%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 85% சுத்த தங்கமும் 15% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது மெருதுவாகவும் இருக்காது கடினமாகவும் இருக்காது இரண்டிற்கும் இடைபட்ட அளவில் இருக்கும்.
  • உரைக்கல்லில் உறைந்த இடத்தில்  Brown, கலராக இருக்கும்.
  • உரைந்த இடத்தை உறை நன்றாக தெரியும், துகள்கள் சிதறாது.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் சிறிது மங்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தால் எவ்வித மாற்றமும் நிகழாது.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 85% சுத்த தங்கமாகும்.
80%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 80% சுத்த தங்கமும் 20% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது கடினமாக இருக்கும்.
  • உரைக்கல்லில் உறைந்த இடத்தில்  Bright Brown, கலராக இருக்கும்.
  • உரைந்த இடத்தை உறை பார்வைக்கு அழுத்தமாக தெரியும், துகள்கள் சிதறாது.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் சிறிது மாற்றம் இருக்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தால் பச்சை நிறமாக மாறிவிடும்.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 80% சுத்த தங்கமாகும்.
75%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 75% சுத்த தங்கமும் 25% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது மிக மிக கடினமாக இருக்கும்.
  • உரைக்கல்லில் உறைந்த இடத்தில் வெளிறிய நிறமாக இருக்கும்.
  • உரையும் பொழுது துகள்கள் சிதறாது.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் உரை சிறிது கலங்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தால் பச்சை நிறமாக மாறிவிடும்.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 75% சுத்த தங்கமாகும்.
65%  தங்கத்தின் பரிசோதனை விளக்கம்:
  • 65% சுத்த தங்கமும் 35% வேறு உலோகமும் இருக்கும்.
  • தங்கத்தை உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைக்கல்லில் உரசும் போது மிக மிக கடினமாக இருக்கும்.
  • உரைக்கல்லில் உறைந்த இடத்தில் சிவப்பு கலந்த வெண்மை நிறமாக இருக்கும்.
  • உரைந்த இடத்தை உறை பார்வைக்கு அழுத்தமாக தெரியும்.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் உரை சிவக்கும், மேலும் அதன் மீது உப்பு கல் வைத்து பார்த்தால் உரை பொங்காமல் மறைந்து கோடு போல தோன்றும்.
  • மேற்கண்ட நிகழ்வுகள் நிகழ்ந்தால் அது 65% சுத்த தங்கமாகும்.
0% தங்கமே இல்லை என்பதற்கான பரிசோதனை விளக்கம்:

  • தங்கவண்ணபூச்சு செய்யப்பட்ட நகை செம்பு, பித்தளை போன்ற வேறு உலோகத்தினால் செய்யப்பட்டதாக இருக்கும்.
  • உரைகல்லில் 7 முறை உரச வேண்டும்.
  • உரைந்த துகள்கள் மீது நைட்ரிக் அமிலம் வைத்து பார்த்தால் உரை அமிலத்தில் கலந்து விடும்.(குறிப்பு: தங்கத்தை தவிற மற்ற உலோகங்கள் நைட்ரிக் அமிலத்தில் கரைந்துவிடும்).
  • நைட்ரிக் அமிலத்தில் உரை கரைந்துவிட்டால் அதில் தங்கமே இல்லை என்பதை உறுதி செய்யலாம்.

                                                                                                                        எழுத்து,
                                                                                                                         சுரேஷ்.

Sunday, 3 November 2019

விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதற்காக கற்காதே, நீ கற்றது உன்னை விஞ்ஞானி ஆக்கும்.





விழித்தெழு தமிழா உனக்காக எனது கரங்கள் இந்த கட்டுரையாக,


        கல்வி கற்பது எதற்கு? அதை எப்படி கற்க வேண்டும்? இப்பொழுது நாம் சரியான புரிதலோடு கற்கிறோமா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் என் புரிதலின்படி என் சொந்த கருத்தை எளிமையான உரைநடையில் இக்கட்டுரையில் பதிலாக பதிவிட்டிருக்கிறேன், வாசகர்கள் இக்கட்டுரையை படித்து விட்டு கல்வி கற்பதை பற்றிய உங்கள் மேலான கருத்தையும் தெரிவிக்கலாம்.

எதற்கு கல்வி கற்க வேண்டும்?

படிப்பு எதற்கு என்று ஒரு 5ம் வகுப்பு மாணவனிடம் கேட்டால் டாக்டர் , என்ஜினீயர் ஆவதற்கு அல்லது வேலைக்கு போக என்று சொல்வான், காரணம் அவன் அவ்வாறு வழிநடத்தப்பட்டிருக்கிறான், படிக்க வைக்கும் பெற்றோரும் சரி கற்று கொடுக்கும் ஆசிரியரும் சரி எதற்கு கற்க வேண்டும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

சரி எப்படி தெளிவு படுத்த வேண்டும்?

1ஆம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரை நீ படிப்பது  முதலில் கற்க வேண்டிய அடிப்படையான கல்வி ஆகும். நீ கற்கும் கல்வியானது  வருங்காலத்தில் நீ வேலைக்கு செல்வதற்கு அல்லது தொழில் செய்து பணம் சம்பாதிக்க மட்டுமல்ல, இவ்வுலகில் நாம் தெரிந்து கொள்ள பல கோடி விஷயங்கள் உள்ளன, அவற்றை பற்றி தெரிந்து கொள்ளத்தான் என்பதை புரிய வைக்க வேண்டும்.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால்,
  • 1ஆம் வகுப்பிலிருந்து 5ம் வகுப்பு வரை பொதுவாக தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை கல்வியை கற்கின்றோம் 
  • 6ஆம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை சற்று கூடுதலான அடிப்படை கல்வியை கற்கின்றோம். 
  • 11ஆம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பிடித்த பாடப்பிரிவு துறைவாரியாக சற்று நுணுக்கம்மாக கல்வியை கற்கின்றோம்.
  • கல்லூரியில் வேலைக்கு செல்வதற்கு தேவைப்படும் அடிப்படையான  துறைவாரியான கல்வியை கற்கிறோம்.
  • வேலைக்கு செல்லும் பொழுது நாம் படித்த படிப்பின் அடிப்படை சற்று பயன்படும், மற்ற அனைத்தும் வேலைக்கு செல்லும் இடத்த்தில் பயிற்சி கொடுத்துவிடுவர்.
  • படிப்பை முடித்தவுடன் வேலைக்கு செல்லலாம் அல்லது விஞ்ஞானி ஆகலாம் அல்லது விவசாயி ஆகலாம் அல்லது  விளையாட்டு வீரராகலாம் என அவன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அனைத்தை பற்றியும் கூற வேண்டும், அவன் மட்டும் தான் அவனது வாய்ப்பை தேர்ந்தெடுக்கவேண்டும், அப்பொழுதுதான் அவனது ஆர்வம்  விருப்பமானது முயற்சியாய் மாறி, நீங்கள் நினைத்ததை விட மேலே முன்னேறி வெற்றி அடைய வாய்ப்புகள் அதிகம். நாம் எதற்கு கல்வி கற்க வேண்டும் என்பதை இப்படி தெளிவு படுத்தலாம்.

எப்படி கற்க வேண்டும்?

                    "விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதற்காக கற்காதே,  நீ கற்றது உன்னை விஞ்ஞானி ஆக்கும்"

இதற்கான விளக்கம் நுணுக்கமான கற்றல் மூலம் மட்டுமே ஒன்றை பற்றிய ஆழ்ந்த புலமை கிடைக்கும் அது  உன் மூளையை தூண்டி ஒன்றுடன் ஓன்று பொருந்தி பார்த்து   புதிய கண்டுபிடிப்புகள் உருவாகும் எனவே நீ கற்பதை சரியாக நுணுக்கமாக கற்றால்  அது உன்னை தானாகவே விஞ்ஞானி ஆக்கும்.

சாதாரண அடிப்படை கற்றல் அல்லாமல் நுணுக்கமான கற்றலுக்கு ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்:

  • நீர் என்பது  H2O.
  • H2O என்பது 2 ஹைட்ரஜன் மூலக்கூறு மற்றும் 1 ஆக்சிஜன் மூலக்கூறு ஆகும்.
  • ஹைட்ரஜன் வாயுவை பிடித்து பலூனில் அடைத்து விட்டால் மேல் நோக்கி செல்லும், இதை நம் ஊர் திருவிழாக்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். 
  • ஆக்சிஜன் என்பது நாம் சுவாசிக்கும் வாயு ஆகும்.
  • நீரிலிருந்து ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் மின்னாற்பகுத்தலின் மூலம் தனித்தனியே பிரிக்க இயலும். 
  • ஹைட்ரஜன் காற்றை விட 14 முறை அடர்த்தி குறைவு எனவே தான் பலூன் மேலே செல்கிறது. 
  • 2 ஹைட்ரஜன் மற்றும் 1 ஆக்சிஜன் சாதாரணமாக நீராக மாறாது, நீராக மாற வேண்டும் என்றால் 2ஹைட்ரஜன் 1ஆக்சிஜன் மூலக்கூறுகள் பல கோடி முறை மோதி கொள்ளும் அந்த மோதலில் ஒரு சில மோதலினால் ஏற்படும் வெப்பத்தினால் ஒரு நீர் துளி உருவாகும், தகுந்த இயற்க்கை சூழ்நிலை  இருந்தால்தான் மழை நீர் உண்டாகும், இயற்கையை தாண்டி செயற்கையாக மழையை உருவாக்க முயன்றால், காலம் தவறி மழை பெய்யும், அல்லது மழையே பெய்யாது இது இயற்க்கை சூழ்நிலையை சிதைப்பதற்கு சமம் ஆகும்.
  • ஹைட்ரஜனை சுத்தமான எரிவாயுவாக பயன்படுத்த இயலும், ஹைட்ரஜன் வாயுவை  மின்னாற்பகுதல் மூலம்  பிரித்து வீட்டுக்கு தேவையான சமையல் எரிவாயுவாக பயன்படுத்தலாம். 
  •   இன்று வரை செய்திகளில் வருகின்றது பள்ளி மாணவர்கள் வாகனத்தை நீரின் மூலம் இயக்கி சாதனை என்று அவர்கள் ஹைட்ரஜன் வாயுவை  மின்னாற்பகுதல் மூலம்  பிரித்து வாகனத்தில் புகுத்தி இயக்குகின்றனர். இப்படிப்பட்ட மாணவர்கள்தான் கல்வியை முறையாக நுணுக்கமாக கற்று செய்து காட்டி வருகின்றனர், வெற்றியும் அடைகின்றனர், நான் சொல்வது அப்படிப்பட்ட கல்வியை தான், பின்னாளில் ஹைட்ரஜன் எரிபொருள் தான் பிரதான எரிபொருளாக இருக்கும் காரணம் இப்பொழுதுள்ள பெட்ரொல் நிலக்கரி என அனைத்தும் தீர்ந்தவுடன் அணைத்து பெருமுதலாளிகளின் பார்வையும் ஹைட்ரஜன் எரிவாயு பக்கம் திரும்பும் அதனால்தான் என்னவோ எந்த அரசியல் அமைப்புகளும் வாகனத்தை நீரின் மூலம் இயக்கி காட்டும் மாணவர்களை கண்டு கொள்ளவில்லை.
  • இப்படி ஹைட்ரஜன் ஆக்சிஜனின் பயன்பாடு அதிகம் உள்ளது நான் ஒரு சில பயன்பாடுகளை மட்டுமே இங்கு கூறியிருக்கிறேன் கண்டுபிடிக்காத பயன்பாடும் அதிகம் உள்ளது 
  • இன்றைய காலகட்டத்தில் ஒன்றை பற்றி ஆழ்ந்த நுணுக்கமான அறிவை பெற இணையத்தளம் பெரும் பங்காற்றுகின்றது அதை சரியாக பயன்படுத்த இன்றய தலைமுறையிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஒன்றை பற்றிய ஆழ்ந்த நுணுக்கமான புலமை பெற்றுவிட்டால் ஏதோ ஒரு நேரத்தில் அந்த ஆழ்ந்த அறிவு வெளிப்படும் புதிய கண்டுபிடிப்பு உருவாகும், எனவே அனைத்தை பற்றியும் மேலோட்டமான அறிவை பயன்படுத்தாமல் ஆழ்ந்த அறிவு சிந்தனை இருக்க வேண்டும், இதைத்தான் அப்துல் கலாம் கனவு காண வேண்டும் என்று கூறுகின்றார், 
நமது கல்விமுறை என்பது மேலோட்டமான அடிப்படை கல்வியைத்தான் நமக்கு போதிக்கும் நம்மிடத்தில்தான் உள்ளது எப்படி கற்க வேண்டும் என்று.

வாழ்வியலுடன் தொடர்புடைய அனுபவ கல்வி:

பள்ளி மற்றும் கல்லூரி கல்வி மட்டும் போதாது அதனுடன் சேர்த்து வாழ்வியலுடன் தொடர்புடைய அனுபவ கல்வியையும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அந்தந்த வயதில் கற்று தர வேண்டும். உதாரணமாக, சிறுவயதில் அருகில் உள்ள கடைக்கு சென்று வர கற்று தரலாம், நாம் வங்கிக்கு செல்லும் பொழுது உடன் அழைத்து சென்று கற்று தரலாம், பேருந்து மற்றும் ரயில் வண்டியில் பயணம் செய்ய பழக்கலாம், அரசு அலுவலகங்களுக்கு அழைத்து சென்று என்னென்ன வேலைகள் நடைபெறுகின்றது என கற்று தரலாம். கலைக்டர் அலுவலகம் அழைத்து சென்று என்னென்ன வேலைகள் கலைக்டருக்கு கீழ் உள்ளவர்கள் செய்கிறார்கள் என புரியவைக்கலாம். முக்கியமாக நமது அரசு நமக்காக என்னென்ன சலுகைகள் வழங்குகின்றனர் என்பதை கூறலாம். நாம் என்ன வேலை செய்கிறோம் எப்படி செய்கிறோம் என்பதையும், வேலை தொடர்பான நமது அனுபவத்தையும் கற்றுத்தரலாம். இவை மட்டும் போதாது புதிதாக ஒருவரை நாம் சந்திக்கிறோம் என்றால் எப்படி அவரை அணுக வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பதையும் கற்றுத்தரவேண்டும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எதை கற்று கொடுத்தாலும் நேர்மையுடன் கூடிய ஒழுக்கத்தையும் கற்று தரவேண்டும். நமது கற்பிதலானது பிற்காலத்தில் அவன் யாருடைய துணையும் இல்லாமல் தனி ஒருவனாக அனைத்தையும் எதிர்கொள்ளும் அளவுக்கு இருக்கவேண்டும்.                                                                                             
எழுத்து,
சுரேஷ்.